Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு ரயில் நிலையம்.. ரூ.20 கோடி மதிப்பீடு..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (09:46 IST)
சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கம் என்ற பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்கு புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இன்னும் நான்கு மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் இதற்கு ரூபாய் 20 கோடி செலவு மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் கிளாம்பாகத்திற்கு அதிக அளவில் பயணிகள் வருவார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. 
 
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான வரைபடம் தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் இந்த ரயில் நிலையத்திற்கான டெண்டர் கோரப்பட்டு நான்கு மாதங்களில் கட்டுமான பணி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
முதல் கட்டமாக 40 லட்ச ரூபாய் நிதியை ரயில்வே நிர்வாகத்திற்கு சிஎம்டிஏ வழங்க உள்ளது என்றும் மூன்று நடை மேடைகள் கொண்ட கிளாம்பாக்கம் ரயில்வே நிலையத்தின் கட்டுமான பணிகளை ஓர் ஆண்டுக்குள் முடிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

அடுத்த கட்டுரையில்
Show comments