Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்: அமைச்சர் சேகர் பாபு

Kilambakkam
, திங்கள், 25 டிசம்பர் 2023 (12:02 IST)
பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
 
1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 2,310 பேருந்துகள் இயக்கப்படும். 
 
பொங்கலுக்கு இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்படுத்துவார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என  அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
 
 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெருக்கடி அதிகரித்ததன் காரணமாக தென் மாவட்ட பேருந்துகளுக்கு என தனியாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த பேருந்து நிலையத்தில் சமீபத்தில் பேருந்துகளை வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்