Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழச்சேரியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை: உடனடியாக விரைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (13:57 IST)
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அந்த பள்ளிக்கு உடனடியாக கல்வி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் விரைந்து சென்று மாணவி தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை சம்பவத்தின்போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உள்பட யாரும் முதல் மூன்று நாட்கள் வரவில்லை என்றும் எனவே தான் அந்த தற்கொலை விவகாரம் மிக தீவிரமாகி போராட்டம் வன்முறையாக மாறியது என்றும் குற்றஞ்சாட்டப் பட்டது
 
இதனையடுத்து கீழச்சேரியில் பள்ளி மாணவி தற்கொலை செய்த ஒரு சில மணி நேரங்களில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக கீழச்சேரி சென்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
இன்னொரு கள்ளக்குறிச்சி சம்பவம் போல் நடந்து விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments