Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பச்சை நிறமாக மாறிய காவிரி நீர் – விவசாயிகள், பொதுமக்கள் பீதி

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (11:11 IST)
ஈரோடு மாவட்டத்தில் காவிரி தண்ணீர் கரும்பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதைக் கண்டு அங்குள்ள பொதுமக்களும் விவசாயிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம் பகுதிக்கு அருகில் ஓடும் காவிரி நீர் சாயப்பட்டறை  மற்றும் தோல் தொழிற்சாலைக் கழுவுகளால் மாசுபட்டு வருகிறது. கடந்த மாதம் பெய்த பெருமழையில் ஆற்றில் தேங்கியிருந்த கழிவுகள் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் ஒரு மாதமாக தெளிவாக ஓடிய காவிரி நீர் தற்போது அடர்பச்சை நிறத்துக்கு மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காவிரி ஆற்றில் இருந்து துரநாற்றமும் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் அந்த தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அந்த தண்ணீரைக் குடிக்கும் ஆடு மாடுகள் உடல் உபாதைகளுக்கு ஆளாவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிறமாற்றத்துக்குக் காரணமாக பொதுமக்கள் ‘மீண்டும் சாயப்பட்டறைகளும் தோல் தொழிற்சாலைகளும் வழக்கம்போல தங்கள் கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலந்து விடுகிறார்கள்’ என்று கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments