Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் பக்கோடா மாஸ்டரான தேமுதிக வேட்பாளர்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (17:02 IST)
தேமுதிக வேட்பாளர் ஒருவர் சிக்கன் பக்கோடா பொறித்துக் கொடுத்து வாக்கு சேகரித்து கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் மக்கள் மேல் அளவுக்கு அதிகமாக அன்பு வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் பொதுமக்கள் வேலை செய்யும் போது அவர்களுக்கு உதவி எல்லாம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு அதிமுக வேட்பாளர் துணி எல்லாம் துவைத்த வீடியோ வைரலானது.

அதையடுத்து இப்போது திருத்தணி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வார சந்தையில் காய்கறியில் விற்றும் டீக்கடை ஒன்றில் டீ போட்டுக்கொடுத்தும் மக்களிடம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார். இப்போது கரூர் தொகுதி தேமுதிக வேட்பாளரான கஸ்தூரி தங்கராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது கடை ஒன்றில்  சிக்கன் பக்கோடா பொறித்துக் கொடுத்து கலகலப்பாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments