Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கொரோனா கால ஊரடங்கு வருமா ?? சுகாதாரத்துறை செயலர் தகவல்

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (16:57 IST)
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கால ஊரடங்கு அமலுக்கு வருமா என்பது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்..

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது


கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், மத்திய அரசு மக்கள் முகக்கவசத்துடன் செல்லவேண்டுமெனக் கூறியுள்ளது. தக்கப் பாதுக்காப்பு மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது..

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் ஊர்டங்கு அமலில் உள்ள நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு வருமா எனக் கேள்வி எழுந்து வந்த்து.

இதுகுறித்து தமிழக  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது
:” தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ள இடங்களில் மட்டுமே மினிஊரடங்கு அமலில் இருக்கும்.மீண்டும் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments