Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸ்தூரி அட்ராசிட்டி - கமல், ஸ்டாலின் இருவரையும் கலாய்த்து டிவிட்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (15:22 IST)
நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் கமல், ஸ்டாலின் ஆகிய இருவரையும் கலாய்க்கும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல், திமுக, அதிமுக ஆகிய இருக்கட்சிகளும் ஊழல் கறைபடிந்தவையே, அதனால் இருக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என அறிவித்திருந்தார். அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக திமுக வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கமலை பூம் பூம் மாட்டுக்காரன் போல சித்தரித்து கேலிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. திமுக – கமல் இடையிலான இந்த கருத்துமோதல் தமிழக அரசியலில் கவனம் பெற்றது.

இதையடுத்து திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமணத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின், கமல் இருவரும் அரசியல் நாகரிகம் கருதி அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பும் மக்களிடம் கவனம் பெற்றது. இந்த இரு சம்பவங்களையும் வைத்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் திமுகவையும் திராவிடக் கொள்கைகளையும் கேலி செய்யும் விதமாக ஒரு டிவிட்டைப் பகிர்ந்துள்ளார்.

அந்த டிவிட்டில் ’மதிமாறனை தோழராக்கி கமலை கழுதையாக்கி , பூம் பூம் மாடாக்கி நாயாக்கி நரியாக்கி திராவிடத்தின் ஒரே பாதுகாவலர்கள் என பிதற்றுபவர்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று பதறுகிறார்கள் கதறுகிறார்கள். முரசொலிக்கும் வலிக்குமென்றால் குற்றம் குறுகுறுக்குதென்றே தோணுதய்யா !’  என்ற டிவிட்டைப் பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த ட்விட்டின் மூலம் திமுக தனது கேலிக் கட்டுரையின் மூலம் தாங்களும் ஊழல் கட்சிதான் என்பதை நிரூபித்துவிட்டது என்பது போல கமலின் மைண்டவாய்ஸ் சொல்வது போல பதிவிட்டுள்ளார். ஆனால் இதைவ் வழக்கம்போல கமலின் புரியாத டிவிட்டர் ஸ்டேட்டஸ் போலப் போட்டு கமலையும் கேலி செய்துள்ளார்.

இதன் மூலம் கமல், ஸ்டாலின் ஆகிய இருவரையும் ஒரே டிவிட்டில் கஸ்தூரி நக்கலடித்திருப்பதாகவும் டிவிட்டர்வாசிகள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments