Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடி ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை: கரூர் எஸ்பி விளக்கம்..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (11:06 IST)
தமிழகம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை செய்ய வருமானவரித்துறையினர் சென்றபோது திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. 
 
இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி விளக்கம் அளித்துள்ளதாவது: கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகளை தடுத்த விவகாரத்தில் ஐடி ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. சோதனைக்கு முன்பு வருமானவரித் துறையினர் பாதுகாப்பு கேட்பது வழக்கம், ஆனால் எந்தவித தகவலும் எங்களுக்கு வரவில்லை.
 
இருப்பினும் ஐடி ரெய்டு குறித்து தகவல் அறிந்து 9 இடங்களுக்கு 150 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருவருடைய பெர்சனல் டேட்டா வேண்டுமா? வெறும் 99 ரூபாய்க்கு கிடைக்கும்.. அதிர்ச்சி தகவல்..!

கேமிங் ஸ்டுடியோக்களை இழுத்து மூடும் Microsoft! அதிர்ச்சியில் XBox ஊழியர்கள்!

சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: 2 மாணவர்கள் உள்பட மூவர் கைது..!

மின்வெட்டு என புகார் கொடுக்க வந்த குடியிருப்பாளர்கள்: கட்டையை எடுத்து தாக்கிய பாதுகாவலர்கள் .. அதிர்ச்சி சம்பவம்..

ஈரான் தலைவர் காமேனியை போட்டுத்தள்ள ப்ளான்.. ஆனால்..? - இஸ்ரேல் அமைச்சர் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments