Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடல்

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (18:33 IST)
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பொய்யாமொழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பொய்யாமொழி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.அந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் தன்னார்வலர்கள் அந்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குளிரூட்டப்பட்ட அறைகளையும், ஸ்மார்ட் கிளாஸ் போன்ற வசதிகளையும் செய்து கொடுத்தனர்.இந்த செயல் சுற்றுவட்டாரங்களில் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

மேலும் தன்னார்வலர்களின் இந்த செயலைப் பாராட்டும் விதமாக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்குச் சென்று  நேரிலேயே தன்னார்வலர்களைப் பாராட்டினார்.

பின்பு அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரோடு மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடலையும் நடத்தினார்.

 மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் உடன் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி மற்றும் பொய்யாமொழி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை திருமதி முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments