Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தார் சாலை இறுகும்வரை காத்திருக்க கூடாதா? கரூர் கலெக்டர் விளக்கம்..!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (10:33 IST)
சமீபத்தில் கரூரில் தார் சாலை போடப்பட்ட நிலையில் அந்த சாலை தரமற்றதாக இருக்கிறது என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஒரு சிலர் தார் சாலையை கையால் பெயர்த்து எடுக்கும் காட்சி இருந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மாவட்டம் தரங்கம்பட்டியில் தரமற்ற தார் சாலைகள் போடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியானது தவறான செய்தி.

தார் சாலை பணி மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களுக்குள் சேதப்படுத்தி தரமற்ற சாலை அமைத்தது போல் செய்தி பரப்பப்பட்டுள்ளது. பொதுவாக தார் சாலை அமைக்கப்பட்டு இருகுவதற்கு 48 முதல் 72 மணி நேரங்கள் ஆகும். இது அறிவியல் ரீதியான உண்மை.

ஆனால் அதுவரை பொறுக்காமல் அதற்கு முன்பே சாலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments