Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர்: இளையோர் தடகளப் போட்டிக்கு செல்லும் 74 வீரர்கள்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (20:15 IST)
37 வது மாநில இளையோர் தடகளப் போட்டிக்கு கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பங்கேற்கும் 74 வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
37ஆவது மாநில இளையோர் தடகளப்போட்டி திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வரும் 14ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இதில் கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 74 வீரர்கள் 37வது மாநில தடகள போட்டியில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வழி அனுப்பும் நிகழ்வு கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
 
ஓய்வு பெற்ற முன்னாள் தடகள வீரரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான விஜயகுமார் தலைமையில் மாநில தடகள சங்கம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கமும் இணைந்து வீரர், வீராங்கனைகளுக்கு டீ சர்ட்டுகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments