Publish Date: Mon, 25 Jan 2021 (16:02 IST)
Updated Date: Mon, 25 Jan 2021 (16:22 IST)
தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து முதல்வரிடம் பேசுவேன் என கருணாஸ் தகவல்.
தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்திலும் கூட்டணி பங்கீகளிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இது குறித்து பேட்டியளித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன். தொகுதி பங்கீடு பேசுவதற்கு காலம் இருக்கிறது. முதல்வர் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் முடித்துவிட்டு வந்த பின்பு சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.