Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதியின் கேள்விகளை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை - பண்ருட்டி ராமச்சந்திரன்!

கருணாநிதியின் கேள்விகளை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை - பண்ருட்டி ராமச்சந்திரன்!
, சனி, 15 அக்டோபர் 2016 (08:25 IST)
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

 
 
அப்போது அவர் கூறியதாவது, முதல்வர் ஜெயலலிதா குணம் அடைந்து வருகிறார். நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார். விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார். மருத்துவர் குழுவினர் அவரது உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள். முதல்வரை பற்றி வதந்திகள் பரப்பப்படுகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். 
 
பொறுப்புக்களை மாற்றி கொடுத்ததற்கு முதலமைச்சர் கையெழுத்து போட்டாரா? என்று கருணாநிதி பேசியிருக்கிறார். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்வார். அவரை முதலமைச்சர் ஆக்கினால் மட்டுமே சும்மா இருப்பார். கருணாநிதியின் கேள்விகளை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மூலிகை பெட்ரோல் மோசடி’ - ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை!