Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’மூலிகை பெட்ரோல் மோசடி’ - ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை!

’மூலிகை பெட்ரோல் மோசடி’ - ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை!
, சனி, 15 அக்டோபர் 2016 (07:18 IST)
'மூலிகை மூலம் பெட்ரோல்' தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக கடந்த 1999 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ராமர் பிள்ளை என்பவர் கூறிவந்தார்.


 
 
மேலும், ராமர் பிள்ளை, 'மூலிகை மூலம் பெட்ரோல்' தயாரிக்கும் முறையை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் முன்னர், செய்து காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
இதை அடுத்து, ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை "மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றம் செய்து விற்பனையில் இறங்கினார். அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களையும் துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார். 
 
ஆனால், அவரால் விற்பனை செய்யப்பட்ட எரிபொருளை பயன்படுத்திய பெரும்பாலான வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சிபிஐ மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் தான் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.
 
சாதாரண பெட்ரோலில் கலப்படம் செய்து 'ராமர் பெட்ரோல்' என்ற பெயரில் விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ததது. அத்துடன் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் இன்று ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அப்பல்லோவில் ரோசய்யா கூறியதாவது......’