Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி

Webdunia
ஞாயிறு, 14 ஜனவரி 2018 (11:25 IST)
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சி தொண்டர்களை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்திப்பது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு கருணாநிதி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதியை சந்திக்க வரும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
தனது ஆட்சி காலத்தில் தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டு என அறிவித்தவர் கருணாநிதி. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த தொண்டர்கள், ஆசியும் பெற்றனர். நீண்ட நாட்களுக்கு கருணாநிதியை சந்திப்பதால், ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டு வாசலில் குவிந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மாநில பட்ஜெட்.. பெண்கள் பாதுகாப்புக்கு மட்டும் ரூ.5100 கோடி ஒதுக்கீடு..!

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments