Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞருக்காக உருகும் அழகிரி!

கலைஞருக்காக உருகும் அழகிரி!
, வெள்ளி, 28 அக்டோபர் 2016 (11:00 IST)
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதி மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
 

 
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவாக இருப்பதால் அவரை பார்வையாளர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என திமுக சார்பில் சமீபத்தில் கூறப்பட்டது. 
 
கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார் என்றும்,  அவர் ஓய்வெடுக்க கூறி மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதால், பார்வையாளர்கள் அவரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டது.
 
இந்நிலையில், அவரது மகன் மு.க.அழகிரி இன்று மாலை, கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
 
மு.க.அழகிரி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். மேலும், சமீபத்தில் கருணாநிதி அளித்த பேட்டியில், மு.க. ஸ்டாலினே என் அரசியல் வாரிசு. மு.க.அழகிரியை நினைத்து ஏங்கவில்லை என்று வெளிப்படையாக பேசியிருந்தார்.
 
அப்போது கலைஞரின் நலன் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அழகிரி, ‘’தலைவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து விடுவார்’’ என்று தெரிவித்தார். மு.க.அழகிரி - கருணாநிதி சந்திப்பு அரசியல் வட்டாரத்த்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி..