Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி..

கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி..

கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி..
, வெள்ளி, 28 அக்டோபர் 2016 (10:50 IST)
திமுக தலைவர் கருணாநிதியை, அவரது மகன் மு.க. அழகிரி நேற்று சந்தித்து பேசினார்.


 

 
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவாக இருப்பதால் அவரை பார்வையாளர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என திமுக சார்பில் சமீபத்தில் கூறப்பட்டது.  
 
கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார் என்றும்,  அவர் ஓய்வெடுக்க கூறி மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதால், பார்வையாளர்கள் அவரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டது. 
 
இந்நிலையில், அவரது மகன் மு.க.அழகிரி நேற்று மாலை, கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
 
மு.க.அழகிரி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். மேலும், சமீபத்தில் கருணாநிதி அளித்த பேட்டியில், மு.க. ஸ்டாலினே என் அரசியல் வாரிசு. மு.க.அழகிரியை நினைத்து ஏங்கவில்லை என்று வெளிப்படையாக பேசியிருந்தார். 
 
இந்நிலையில், மு.க.அழகிரி- கருணாநிதி சந்திப்பு அரசியல் வட்டாரத்த்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அதன்பின்னர் செய்தியாளர் பேசிய அழகிரி  “தலைவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்துவிடுவார்” என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரக்கு கம்மியா ஊத்தி கொடுத்த நண்பன் கொடூர கொலை!