Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொண்டர்கள் புடை சூழ கருணாநிதியின் உடல் கோபாலபுரத்திற்கு செல்கிறது

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (21:30 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தொண்டர்கள் புடை சூழ  கோபாலபுரத்திற்கு செல்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை மறைந்தார் என்ற செய்தியை கேட்டு கோடிக்கணக்கான திமுக தொண்டர்கள் மீளாத்துயரில் உள்ளனர். தங்கள் தலைவரின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க சென்னையில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
 
கருணாநிதிக்கு குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இன்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையும், சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரையும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கருணாநிதியின் உடல் நாளை அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் கோபாலபுர இல்லத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது. தொண்டர்கள் சூழ கருணாநிதியின் பூத உடல் கோபாலபுரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments