Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சி வருத்தப்படும்.. வாபஸ் பெற்ற கரும்பு விவசாயி சின்னம் பெற்ற வேட்பாளர்..!

Siva
ஞாயிறு, 31 மார்ச் 2024 (07:21 IST)
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற நிலையில் அந்த சின்னத்தால் நாம் தமிழர் கட்சியினர் வருத்தப்படுவார்கள் என்று கூறி  மனுவை  வாபஸ் பெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

 நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சில தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த சின்னம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் ஒலிவாங்கி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  திருப்பூர் தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் சந்திரசேகரன் என்பவர் போட்டியிட்ட நிலையில் அவர் திடீரென நேற்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

இது குறித்து அவர் செய்தியாளரிடம் பேசிய போது ’கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தேன், ஆனால் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை நான் பெற்றுள்ளதால் அவர்கள் வருத்தப்படுவார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். நாம் தமிழர் கட்சி நல்ல கட்சி, தமிழகத்தின் மக்களுக்காக உழைக்கும் கட்சி ,எனவே எனது மனசாட்சி அந்த சின்னத்தில் போட்டியிட இடம் தரவில்லை, அதன் காரணமாக மனுவை வாபஸ் பெற்றேன்’ என்று கூறியுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments