Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் இந்த கார்த்திகேயன்? சிக்கியது ஆயுதங்கள்... உமா மகேஸ்வரி வழக்கில் முடிவு...

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (08:44 IST)
உமா மகேஸ்வரி கொலை வழக்கில் இன்று ஒரு முடிவு வரும் என போலீஸார் தரப்பில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 
 
இந்த விசாரணையின் பலனாக இந்த வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உமா மகேஸ்வரி வீட்டில் திருடு போயிருந்த நகைகள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தகவ்ல் தெரிவித்துள்ளனர். 
அதோடு இந்த கொலைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளாராம். கார்த்திகேயன் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன். சீனியம்மாள் இந்த வழக்கின் சந்தேக் வளையத்திற்குள் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இந்த கொலை வழக்கில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளி கார்த்திகேயனையும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளையும் போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். 
 
இதனால், அநேகமாக இன்று இந்த கொலை வழக்கிற்கு ஏதேனும் ஒரு முடிவு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments