Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கிடா வெட்டி சாமி கும்பிட தடை போடுவார்கள்: கார்த்தி சிதம்பரம்

Siva
ஞாயிறு, 31 மார்ச் 2024 (16:08 IST)
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிடாவெட்டி சாமி கும்பிட தடை செய்வார்கள் என்றும் நமது பழக்க வழக்கங்களுக்கு தடை செய்துவிட்டு சமஸ்கிருத முறையில் தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பார்கள் என்றும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்

வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது வெறும் வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் அல்ல, நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல் என்றும் அவர் கூறினார். தமிழக மக்கள் கட்டும் வரிப்பணம் வட மாநிலத்திற்கு செலவு செய்யப்படுகிறது என்றும் இந்த நிலை மாற வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றும் தமிழக அரசின் முத்தான திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் கை சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும் முதலமைச்சர்களை கைது செய்யும் அளவுக்கு நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது என்றும் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ALSO READ: எனக்கு மகளிர் உதவித்தொகை கிடைக்கவில்லை: முதல்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்..!

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments