Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சிதம்பரம் வழக்கில் மாற்றம் – எம்.பி. ஆனதால் சலுகை !

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (09:05 IST)
கார்த்தி சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ். ஊழல் சம்மந்தமான வழக்கை எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து ரூ.305 கோடி நிதி பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகக் கூறி ப சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இப்போது கார்த்தி சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று சிவகங்கை தொகுதியின் எம்.பி ஆகிவிட்டதால் அவர் மீதான இந்த வழக்கு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.களுக்கான சிறப்பு  நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ரவுஸ் அவென்யூ கோர்ட் காம்ளக்ஸில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் இவ்வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குப் பின் விசாரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments