Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

TK Sivakumar
, செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (12:59 IST)
தமிழநாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதைத் திறப்பதை நிறுத்த வேண்டும் என்று கர்நாடகம் மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை நேற்று  கடிதம் எழுதியிருந்தார்

அதில், கர்நாடகம் அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இதனால், தமிழகத்திற்கு நீர் திறந்துவிடும் பட்சத்தில் கர்நாடகம் விவசாயிகள் பாதிக்கப்படுவர். தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்பதில், அரசு உறுதியாக இருக்க வேண்டுமென்று முதல்வர் சித்தராமையாவுக்கு பாஜக முன்னாள் முதல்வர் பசுவராஜ் பொம்மை கடிதம் எழுதியிருந்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளதாக கர்நாடகம் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: வறட்சி காலம் நிலவுவதால் இரு மாநிலங்களிடையே பிரச்சனை வேண்டாம். வேண்டிய மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், மேகதாது அணை இருந்தால், அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு, தமிழகத்தில் இப்போது தண்ணீர் வழங்கியிருக்கலாம்…. மேகதாது அணை உங்கள் நலனுக்காக கட்ட ஒப்புக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன?