Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் அமைச்சராகி இருப்பேன்: கருணாஸ்

Webdunia
புதன், 30 மே 2018 (14:25 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நடத்திய போட்டி சட்டசபை கூட்டத்தில் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜெயலலிதா இருக்கும்போது வெளி மாவட்டம் செல்ல காவல்துறை பாதுகாப்பு எனக்கு இருந்தது. ஆனால் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேரவையில் பேசியதால் எனக்கு பாதுகாப்பை விலக்கிவிட்டார்கள். தவறுகளை சுட்டிக் காட்ட கூடாது என அரசு நினைக்கிறது 
 
தமிழக முதல்வராக இருக்கும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டையே தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுவது எவ்வளவு பெரிய கேவலம். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியினை விரைவில் கலைத்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் ஆட்சியை அமைக்க வேண்டும்
 
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன். மேலும் கூவத்தூரில் என்ன நடந்தது என்பதற்கு நானே ஆதாரம். எனக்கு தெரியும் அங்கு என்ன நடந்தது என்று. தமிழகத்துக்கு விடிவு காலம் கிடைக்கும் என்றால் கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன்.
 
இவ்வாறு கருணாஸ் பேசினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments