Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை சந்திக்க வந்த பிரபல தொழிலதிபர் மகன்

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (20:27 IST)
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 வாரங்களாக அங்கேயே தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார்.
 

 
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிந்துகொள்ள பிரபல அதானி குழுமத்தை சேர்ந்த தொழிலதிபர் கரண் அதானி சென்னை வந்தார்.  பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்தார்.
 
பின்னர் அது குறித்து பிஸ்னஸ்லைன் பத்திரைக்கைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், “மரியாதைக்குரிய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்தேன். அவர் விரைவில் குணமடைய எங்களது குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
 
மருத்துவமனையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரையும் சந்தித்தேன்.
 
அவர் விரைவில் பூரண குணமடைய நாங்கள் கடவுளை வேண்டிக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

ஈபிஎஸ்-க்கு எதிராக காய் நகர்த்தும் செங்கோட்டையன்.. சசிகலா, ஓபிஎஸ், தினகரனுடன் இணைகிறாரா?

1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த பங்குச்சந்தை.. 10 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்..!

அதானி மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் வழக்கு தடைபடுமா? டிரம்ப் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments