Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடி தியானம் எதிரொலி: விவேகானந்தர் நினைவிடத்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

Modi

Siva

, புதன், 19 ஜூன் 2024 (08:18 IST)
தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்த நிலையில் அந்த இடம் உலகப் புகழ் பெற்றதாகவும் இந்த நிகழ்வுக்கு பின்னர் உலகின் பல நாடுகளில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகில் ஜூன் 15, 16 ,17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணம் செய்ததாக தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்ரீத் மற்றும் வார விடுமுறை காரணமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்திற்கு அதிகம் வருவதாக தகவல் வெளியானாலும் பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு மிக அதிகமாக சுற்றுலா பயணம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவதாக கன்னியாகுமரியில் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் வியாபாரமும் அமோகமாக நடப்பதாக கன்னியாகுமரியை சேர்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் மாதம் இப்படி நடந்ததே இல்லை.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்..!