மூதாட்டியின் கைகளை கட்டி கடலில் போட முயற்சி செய்த மக்கள்

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (22:10 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூதாட்டி ஒருவரை கைகளை கட்டி கடலில் தூக்கி போட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மணக்குடி என்ற பகுதியில் அடிக்கடி குழந்தைகள் காணாமல் போவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் மூதாட்டி ஒருவர் சந்தேகப்படும் வகையில் இருந்ததாக கூறப்பட்டது. அவர் குழந்தையை திருட வந்ததாக நினைத்த அந்த பகுதி மக்கள் அவர் கைகளை மரத்தில் கட்டி விசாரித்தனர்

அப்போது அந்த மூதாட்டி தான் பசிக்கு உணவு கேட்டு வந்ததாக அழுதபடியே கூறினார். இருப்பினும் அதனை நம்பாத அந்த பகுதி மக்கள் அவரை கைகளை கட்டி கடலில் போடுவது போல் பாவ்லா காட்டினர். இதனால் அந்த மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உண்மையிலேயே அந்த மூதாட்டி அப்பாவி என தெரிய வந்ததை அடுத்து அவருக்கு தேநீர் , சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments