Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் வீட்டில் கனிமொழி, ராஜாத்தி அம்மாள்..! பிரேமலதாவிற்கு ஆறுதல்.!!

Senthil Velan
செவ்வாய், 30 ஜனவரி 2024 (13:42 IST)
திமுக எம்பி கனிமொழி, திருமதி ராஜாத்தி அம்மாள் ஆகியோர் மறைந்த விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், கடந்த மாதம் 28ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்தில், அரசியல் பிரமுகர்களும், திரைத்துறையினரும், தேமுதிக தொண்டர்களும், பொதுமக்களும் என ஏராளமானோர் நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ALSO READ: தமிழகம் முழுவதும் போராட்டம்..! ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது..!
 
இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அவரது தாயார் திருமதி.ராஜாத்தி அம்மாள் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்றனர். அங்கு விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை  செலுத்திய அவர்கள்,  திருமதி.பிரேமலதா விஜயகாந்த்திற்கு ஆறுதலும்  தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் 25% வரி மிரட்டல்.. பெரிய அளவில் பங்குச்சந்தை பாதிப்பில்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments