Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் இயலாமையை ஒப்புக் கொண்ட கனிமொழி: எல். முருகன் வரவேற்பு

Mahendran
திங்கள், 7 அக்டோபர் 2024 (16:45 IST)
தமிழக அரசின் இயலாமையை கனிமொழி எம்பி ஒப்புக்கொண்டார் என மத்திய அமைச்சர் எல். முருகன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடந்த வான் சாகச நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி எம்பி, "இதுபோன்று அதிக நபர்கள் கூடும் நிகழ்ச்சியை இனி தவிர்க்கலாம்" என்று கூறியிருந்தார்.

இதனை அடுத்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "சென்னையில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றும் தெரிவித்தார்.

விமான கண்காட்சிக்கு ஏற்ப சமாளிக்க முடியாத கூட்டத்தை தவிர்த்திருக்கலாம் என்று கனிமொழி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவிக்க, "இது தமிழக அரசின் இயலாமையை ஒப்புக்கொள்வதாகும்" என மத்திய அமைச்சர் எல். முருகன் வரவேற்றார்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி டீ-சர்ட் போடக்கூடாது! மீறினால் நாங்கள் வழக்கு போடுவோம்! - ஜெயக்குமார் எச்சரிக்கை!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மக்கள் கூடும் இடங்களில் இனி வரும் காலங்களில் கவனம் செலுத்துங்கள்! - நடிகர் விஜய் கோரிக்கை!

மெரினா வான் சாகச நிகழ்ச்சிக்குப் பிறகு 18 டன் குப்பை அகற்றம்… பணியில் ஈடுபட்ட 128 தூய்மைப் பணியாளர்கள்!

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. மிக கனமழை பெய்யும் என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments