Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையில் தோன்றியே ரசிகர்களை வென்றவர்! – ரஜினிகாந்த்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (10:55 IST)
நடிகர் ரஜினிகாந்த்க்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளதற்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இந்திய திரைத்துறையில் அளித்த சிறந்த பங்களிப்பிற்காக மத்திய அரசு அவருக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.” என வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments