Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற முடிவுக்கு வரவேற்பு; உண்மைகள் வெளிவரட்டும்! – கமல்ஹாசன் ட்வீட்!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (12:13 IST)
பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் முடிவுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் உளவு செயலியான பெகாசஸை பயன்படுத்தி இந்திய அரசு ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளை ஒட்டுக்கேட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments