கூட்டம் வரும்போது வாடைக்கைக்கு விடலாமா? ஊட்டி மலை ரயில் விவகாரம்! – கமல்ஹாசன் ட்வீட்

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (18:35 IST)
ஊட்டி மலை ரயிலில் டிக்கெட்டுகள் அதிக கட்டணத்திற்கு விற்கப்பட்ட விவகாரம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான ஊட்டியில் இயங்கி வரும் மலை ரயில் சேவை டிக்கெட் கட்டணம் நபருக்கு 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே நிர்வாகம் இடையே சிலகாலம் மட்டும் தனியாருக்கு ரயில் வாடகை விடப்பட்டதாகவும் அப்போது ஒட்டப்பட்ட கட்டண ஸ்டிக்கர்கள் அகற்றப்படாததால் இந்த குழப்பம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும்.” என கூறியுள்ளார்.
மேலும் “எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது” என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments