Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருக வருக புது யுகம் படைக்க: கட்சி விழாவுக்கு டுவிட்டரில் அழைப்பு விடுத்த கமல்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (10:40 IST)
நடிகர் கமல்ஹாசன் நாளை மதுரையில் நடைபெறவுள்ள பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்து, கட்சி கொடியையும் ஏற்றவுள்ளார். மேலும் தனது கட்சியின் கொள்கைகளையும் அவர் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார். கமல்ஹாசனின் கட்சி கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
 
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கட்சியின் மாநாட்டுக்கு வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க' என்று கூறியுள்ளார்.
 
கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது டுவீட் பதிவு செய்த மூன்றே நிமிடங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments