Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேட்டை காப்பாத்த முடியாதவங்க டாஸ்மாக்கை திறக்கிறார்கள்! – கமல்ஹாசன் ட்வீட்!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (10:41 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக செயல்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகளை மே 7 முதல் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பிற்கு பல அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த செயல்பாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் ” கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

வீட்டுக்கடன் மோசடி.. விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments