Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு மக்கள் மீது நடத்தும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! – கமல்ஹாசன் காட்டம்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (11:10 IST)
இந்தியாவில் பெட்ரோல் விலையை தொடர்ந்து சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் ரூ.710க்கு விற்பனையாகி வந்த கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் மேலும் ரூ.25 உயர்ந்து ரூ.735 ஆக விற்பனை ஆனது. இதனிடையே தற்போது சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்ந்து, ரூ.785க்கு விற்பனை ஆகிறது. 

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments