Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னித்து விடு ஆஷிபா - கமல்ஹாசன் உருக்கம்

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (11:01 IST)
காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது  நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
 
இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “இதை புரிந்து கொள்ள ஆஷிபா நம் சொந்த மகளாக இருக்க வேண்டுமா? அவள் என் மகளாகவும் இருக்கலாம். ஒரு மனிதனாக, தந்தையாக, ஒரு குடிமகனாக ஆஷிபாவை காப்பாற்ற முடியாமல் போனதற்காக கோபப்படுகிறேன். மன்னித்துவிடு குழந்தையே, உனக்கு பாதுகாப்பான உலகத்தை நாங்கள் உருவாக்கவில்லை. உன்னைப் போன்ற குழந்தைகளுக்காகவும், நியாயத்திற்காகவும் நான் போராடுவேன். உன்னை நினைத்து வருந்துகிறோம். உன்னை மறக்க மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்