Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தைத் தாண்டிய உறவு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கமல் ஆதரவு

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (16:33 IST)
திருமணத்தைத் தாண்டிய உறவு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மக்கள் நீதி மன்ற தலைவர் கமல்ஹாசன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

திருமணத்தைத் தாண்டிய உறவில் ஈடுபடும் ஆண் பெண் உறவில் ஆணுக்கும் மட்டும் தண்டனை அளிக்கும் தண்டனைச் சட்டம் 497-ஐ நீக்கி நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து பலதரப்பட்ட இடங்களில் ஆதரவும் விமர்சனக்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து சென்னையில் இன்று ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாஸன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ’நான் எப்போதுமே முன்னோக்கி செல்ல வேண்டும் என்ற ஆசைப்படுபவன். நமது புராணங்களில் கூட இது குறித்த திறந்த மனது உள்ளது. இன்றைய நவீன காலத்தில் ஆணும் பெண்ணும் சமமான நிலை இருக்க வேண்டும்  என்பது நியாயம்தான்’ எனக்கூறினார்.

இதனால் கலாச்சாரம் கெட்டுவிடும் விமர்சனங்களுக்கு ‘கலாச்சாரம் என்பது ஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை மாறக்கூடியது’ எனப் பதிலளித்தார்.

இன்று சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி குறித்த தீர்ப்பையும் தான் வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments