Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி உண்ணாவிரதம் ; எடுபுடி வேலை பார்க்கும் அரசு : வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (11:44 IST)
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் போலியானது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று மாலை திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் நேற்று மாலை ரயில் மூலம் சென்னையிலிருந்து திருச்சி கிளம்பி சென்றார்.
 
இந்நிலையில், இன்று காலை திருச்சியில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய கமல்ஹாசன் “நீதிமன்ற உத்தரவையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என காத்திருந்தோம். ஆனால், அதை தள்ளிப்போடவே மத்திய அரசு விரும்புகிறது. தமிழக அரசு போலியான உண்ணாவிரதத்தை நடத்தியுள்ளது. அதில் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. மத்திய அரசுக்கு எடுபிடி வேலை பார்க்கும் அரசாக இது செயல்படுகிறது” என அவர் குற்றம் சாட்டினார்.
 
மேலும், இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சில முக்கிய துறைகளில் கொள்கைகளுக்கான கோட்பாடுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

அடுத்த கட்டுரையில்
Show comments