Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோற்றுச் சண்டை தொடரத்தான் செய்கிறது: கமல்ஹாசனின் உலக பசிநாள் டுவிட்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (18:59 IST)
ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலக பசிநாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பசி நாளில் கமல்ஹாசன் இதுகுறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
வறிய நாடுகள், வளரும் நாடுகளில் மட்டுமல்ல வல்லரசு நாடுகளிலும் கூட பசியைத் தீர்த்துக்கொள்வதற்கான சோற்றுச் சண்டை தொடரத்தான் செய்கிறது. இன்று உலக பசி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வெறும் விழிப்புணர்வு நோக்கில் மட்டும் பார்க்காமல் பசி போக்கும் உபாயங்களை யோசிக்கும் நாளாகவும் இது கடைப்பிடிக்கப்படவேண்டும்
 
இன்று உலக பசி நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆய்வில் உலகில் 18 நாடுகளில் உணவு பற்றாக்குறை காரணமாக மக்கள் பசியால் வாடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பசியால் வாடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பசியால் வாடுபவர்களின் பட்டியலில் உள்ள 117 நாடுகளில் இந்தியா 102வது இடத்தில் உள்ளதாகவும் கடந்த 2019ஆம் ஆண்டு எடுத்த அறிக்கையில் குறிப்பிட குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments