Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோற்றுச் சண்டை தொடரத்தான் செய்கிறது: கமல்ஹாசனின் உலக பசிநாள் டுவிட்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (18:59 IST)
ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலக பசிநாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பசி நாளில் கமல்ஹாசன் இதுகுறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
வறிய நாடுகள், வளரும் நாடுகளில் மட்டுமல்ல வல்லரசு நாடுகளிலும் கூட பசியைத் தீர்த்துக்கொள்வதற்கான சோற்றுச் சண்டை தொடரத்தான் செய்கிறது. இன்று உலக பசி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வெறும் விழிப்புணர்வு நோக்கில் மட்டும் பார்க்காமல் பசி போக்கும் உபாயங்களை யோசிக்கும் நாளாகவும் இது கடைப்பிடிக்கப்படவேண்டும்
 
இன்று உலக பசி நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆய்வில் உலகில் 18 நாடுகளில் உணவு பற்றாக்குறை காரணமாக மக்கள் பசியால் வாடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பசியால் வாடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பசியால் வாடுபவர்களின் பட்டியலில் உள்ள 117 நாடுகளில் இந்தியா 102வது இடத்தில் உள்ளதாகவும் கடந்த 2019ஆம் ஆண்டு எடுத்த அறிக்கையில் குறிப்பிட குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments