Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமொழி தான் இருக்கே... ரஜினியை சீண்டுகீறாரா கமல்?

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (10:34 IST)
எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நல்லது என ரஜினி கூறியதற்கு, பொதுமொழியாக ஆங்கிலம் இருக்கே என கமல் பதில் அளித்துள்ளார். 
 
இந்திமொழி குறித்து அமித்ஷா பேசியதை பற்றி நடிகர் ரஜினிகாந்திடம் கேட்ட போது அவர் பின்வருமாறு பதில் அளித்தார். எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு அது நல்லது. ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. 
 
அதேபோல் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்க கூடாது. இந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி திணிப்பை தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியாவில் எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்தார். 
இந்நிலையில் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் கூறிய கருத்துக்கள் ரஜினியை சீண்டும் வகையில் இருந்தது. கமல் பேசியதாவது, என் தாய்மொழி மீடு கை வைக்காத வரை அவர்கள் கருத்துக்கள் ஏற்படும். ஆனால், தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்கப்படாது. 
 
நாட்டின் பொதுவான மொழியாக ஆங்கிலம் உள்ளது. விபத்தின் மூலம் கிடைத்த மொழியாக ஆங்கில இருந்தாலும் நன்மையாக அமைந்தது. அடிமையாக இருந்த போதிலும் ஆங்கிலத்தை வைத்து நாம் வேறு கருவி செய்து கொண்டோம் என்று தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments