Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை இளைஞர் பலிக்கு கோபத்துடன் டுவீட் போட்ட கமல்

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (08:20 IST)
கோவையில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்ட பேனரில் மோதி நேற்று அதிகாலை ரகு என்ற இளைஞர் அகால மரணம் அடைந்த துயர சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மரணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று ஆளும் கட்சியை நோக்கி வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் ரகு பலியான சாலைகளில் 'Who Killed Raghu' என்ற வாசகங்களையும் பொதுமக்கள் எழுதி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கோபமான ஒரு டுவீட்டை நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner"ஜி"க்கள் உணரவேண்டும்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் இன்றிரவு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. ராணுவ தலைவருக்கு கொடுத்த போட்டோஷாப் பரிசு..!

புதின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்: டிரம்ப் புலம்பல்..!

முகமது யூனுஸை விரைவில் விரட்டுவேன்: பங்களாதேஷ் ராணுவத் தலைவர் அதிரடி

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு.. ராஜ்யசபா எம்பி ஆகிறாரா கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments