இந்த அரசு பெரியாருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு: கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (19:19 IST)
பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார் என்பதும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதியை சமூகநீதி நாள் என்று அறிவித்தது பாஜக தவிர அனைத்து கட்சிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் பாஜக தலைவரான அண்ணாமலை மட்டும் வ.உ.சி, பாரதியார் ஆகியோர்களை மறந்துவிட்டு பெரியாரை மற்றும் போற்றுதல் சரியா என்ற கேள்வியை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் என்று அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து கமல்ஹாசன் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க, தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். அவரது பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு இந்த அரசு பெரியாருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு. பாராட்டுக்குரிய செயல்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments