Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரியாருக்கு ஒளியூட்டி, பாரதியார், வ.உ.சி இருட்டடிப்பு: சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை!

Advertiesment
பெரியாருக்கு ஒளியூட்டி, பாரதியார், வ.உ.சி இருட்டடிப்பு: சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை!
, திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:06 IST)
பாரதியார், வ.உ.சி பெயரை இருட்டடிப்பு செய்யாதீர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து. 
 
தமிழகத்தில் பெரியரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் பெரியரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கடவுள் நம்பிக்கையுடன் உள்ள பாஜக இந்த அறிவிப்பை வரவேற்கிறது என தெரிவித்தார்.
 
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்ததில் எங்களுக்கு (பாஜக) ஆட்சேபனை இல்லை. ஆனால், பெரியாருக்கு முன்பே சமூகநீதிக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார் பெயர்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப். 8 மட்டும் காலை & மாலை கூடும் பேரவை - காரணம் என்ன?