Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகள் தாக்குதல்: காஷ்மீர் ஆளுனரின் ஆலோசகரை தொடர்பு கொண்ட கமல்

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (19:55 IST)
காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலால் 44 பாதுகாப்பு படையினர் பலியான அதிர்ச்சியில் இருந்து நாடே இன்னும் மீண்டு வராத நிலையில் தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
 
இந்த நிலையில் காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தற்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
 
மேலும் நாட்டின் குடிமகன்கள் அனைவரும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்போம் என்றும், ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். 
 
மேலும் புல்வாமா தாக்குதலில் பலியான இரண்டு தமிழக சிபிஆர்எஃப் வீரர்களான சுப்பிரமணி மற்றும் சிவச்சந்திரனின் குடும்பத்தாரிடம் கமல்ஹாசன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments