Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகள் தாக்குதல்: காஷ்மீர் ஆளுனரின் ஆலோசகரை தொடர்பு கொண்ட கமல்

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (19:55 IST)
காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலால் 44 பாதுகாப்பு படையினர் பலியான அதிர்ச்சியில் இருந்து நாடே இன்னும் மீண்டு வராத நிலையில் தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
 
இந்த நிலையில் காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தற்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
 
மேலும் நாட்டின் குடிமகன்கள் அனைவரும் வீரர்களுடன் தோளோடு தோள் நிற்போம் என்றும், ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். 
 
மேலும் புல்வாமா தாக்குதலில் பலியான இரண்டு தமிழக சிபிஆர்எஃப் வீரர்களான சுப்பிரமணி மற்றும் சிவச்சந்திரனின் குடும்பத்தாரிடம் கமல்ஹாசன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments