Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஞாபகம் வருகிறதா? அவர் யாரென்று புரிகிறதா? - காந்திக்கு கமல் வாழ்த்து

ஞாபகம் வருகிறதா? அவர் யாரென்று புரிகிறதா? - காந்திக்கு கமல் வாழ்த்து
, திங்கள், 30 ஜனவரி 2017 (16:49 IST)
தேசத்தந்தை என்றழைக்கப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் இறந்த தினத்தை நினைவுப்படுத்தும் வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.


 

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ’ஞாபகம் வருகிறதா? அவர் யாரென்று புரிகிறதா?’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை கீழே:

போதியின் நிழலில் ஏற்றிய விளக்கு
ஆத்திக வெயிலில் வியர்த்துக் கருத்தது

தச்சன் ஒருவன் அறிவைச் சீவி
தானே அறைபடச் சிலுவை செய்தனன்

ஜாரின் கோலிற் செம்மை இலையெனச்
சினந்து சிவந்து குடியொன்றுயர்ந்தது

யூதப் பெருமான் அணுவை விண்டதில்
ஆயுதம் கண்டனர் அமெரிக்க சித்தர்

ஒற்றைக் கழியோன் அஹிம்சையில் பெற்றது
உற்றது இன்று ஹிம்சா புரியாய்

அன்பன்
- கமல்ஹாசன்

 இவ்வாறு அதில் எழுதியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது: சட்டசபையில் மசோதா தாக்கல்