Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுமட்டும் நடந்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்: கமல்ஹாசன்

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (14:25 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன
 
அந்த வகையில் தேர்தல் பிரசாரத்தை முதன்முதலாக தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று முதல் ஐந்தாம் கட்ட பிரச்சாரத்தை ஆரம்பித்து உள்ளார்  
 
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன் தமிழகம் வெற்றிநடை போட்டு இருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஆனால் தமிழகம் வெற்றி நடை போட வில்லை என்றும் தமிழகம் ஊழலில் இருப்பிடமாக இருப்பதாகவும் அதை சரி செய்ய வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும் கூறிய கமல்ஹாசன் விரைவில் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம் என்று கூறியுள்ளார்
 
மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கும் தமிழக அரசின் முடிவை தான் வரவேற்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments