Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல்கள் முடிந்தன, பசுத்தோல் உதிர்ந்தன - கமல் சாடல்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:58 IST)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உயராமல் இருந்த நிலையில் நேற்று திடீரென எழுபத்தி ஆறு காசுகள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. சற்றுமுன் வெளியான  தகவலின்படி இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 75 காசுகள் உயர்ந்து உள்ளது என்றும் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கிய போதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments