Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள் - ரசிகர்கள் மத்தியில் கமல்

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2017 (16:35 IST)
ரசிகர்களை சந்தித்து பேசி வரும் கமல்ஹாசன் பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள் என கூறியுள்ளார்.


 

 
வரும் 7ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். நேற்று தமிழக அனைத்து விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், தனது நண்பர்கள், நற்பணி இயக்கத்தினர் விவசாயிகளுக்கு ஏரி, குளங்களை செப்பனிட உதவி செய்வார்கள் என கூறினார். 
 
இந்நிலையில் கேளம்பாக்கத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். தமிழக நலனுகளுக்காக ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். தமிழகத்துக்காக கையேந்துவதில் எனக்கு வெட்கம் இல்லை. பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள்.
 
இயற்கை சீற்றத்துக்கு ஏழை, பணக்காரர் என வித்தியாசம் தெரியாது. சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்து வருகிறோம். பேரழிவு வரும் வரை கத்திருக்க வேண்டுமா? வரும் முன் காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று ரசிகர்களுடனான சந்திப்பில் பேசி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments