Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தைக்கு ஏன் சிலை ? – கமல் விளக்கம் !

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (09:27 IST)
தனது தந்தைக்கு சிலை வைப்பது ஏன் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகரும் அரசியல்வாதியுமான கமலின் 65 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளன்றுதான் அவரது தந்தையின் நினைவு நாளும் வருகிறது. இதையடுத்து  கமல் தனது தந்தை சீனிவாசன் அவர்களுக்கு பரமக்குடியில் சிலை அமைக்க முடிவெடுத்துள்ளார்.

இதற்காக கமல்ஹாசன் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை மதுரை புறப்பட்டுச் சென்றார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ’ எனது தந்தை உயிருடன் இருந்த போது சிலை வைக்க வேண்டுமென விரும்பவில்லை. நாங்கள் செய்யும் பணியைதான் விரும்பினார். அவருடைய ரசிகன், மாணவன் என்ற முறையில் சிலை வைக்க விரும்பினேன். எனது கட்சியினருமே அதையேதான் விரும்பினார். ’ எனத் தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தங்கள் கட்சியினர் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments