Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தைக்கு ஏன் சிலை ? – கமல் விளக்கம் !

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (09:27 IST)
தனது தந்தைக்கு சிலை வைப்பது ஏன் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகரும் அரசியல்வாதியுமான கமலின் 65 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளன்றுதான் அவரது தந்தையின் நினைவு நாளும் வருகிறது. இதையடுத்து  கமல் தனது தந்தை சீனிவாசன் அவர்களுக்கு பரமக்குடியில் சிலை அமைக்க முடிவெடுத்துள்ளார்.

இதற்காக கமல்ஹாசன் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை மதுரை புறப்பட்டுச் சென்றார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ’ எனது தந்தை உயிருடன் இருந்த போது சிலை வைக்க வேண்டுமென விரும்பவில்லை. நாங்கள் செய்யும் பணியைதான் விரும்பினார். அவருடைய ரசிகன், மாணவன் என்ற முறையில் சிலை வைக்க விரும்பினேன். எனது கட்சியினருமே அதையேதான் விரும்பினார். ’ எனத் தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தங்கள் கட்சியினர் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?

இந்தியா உள்பட 70 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments