தேமுதிகவை சீண்டிய கமல்ஹாசன்? ஒரே பேட்டியால் கொந்தளிப்பு

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (14:50 IST)
வாரிசு அரசியலை எல்லாம் நான் செய்யமாட்டேன் என கமல்ஹாசன் கூறியது திமுக மற்றும் தேமுதிகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மக்களவை தேர்தலுக்காக அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதியும், பாமகவிற்கு 7 தொகுதியும் ஒதுக்கியுள்ளது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
 
திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் 20 தொகுதிகளில் திமுகவும் நிற்க உள்ளது.
 
அதிமுக, திமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட தொகுதி உடன்பாடுகளை முடிந்துவிட்ட நிலையில் அமமுக, மக்கள் நீதி மய்யம், போன்ற கட்சிகள் அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியாமல் இருக்கிறது.
 
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில் எனக்கு பிறகு என் பதவிக்கு என் மகள்களோ, மைத்துனரோ வரமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியதில்லை. குடும்ப அரசியல் என்பது இருக்கக்கூடாது. அதேபோல் நான் தமிழன், தமிழை, தமிழ் மண்ணை காக்க எனக்கு ஓட்டுபோடுங்கள் என கூறுவதும் ஒரு வித குடும்ப அரசியல் தான்.
 
குடும்ப அரசியல் என்று கமல் ஸ்டாலினை கூறினாரா அல்லது விஜயகாந்தை சொன்னாரா என தெரியவில்லை. ஆனால் கமல் சீமானை வம்பிழுத்துள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யுடன் கூட்டணி இல்லை.. திமுகவுடன் கூட்டணி தொடரும்.. காங்கிரஸ் மேலிடம் முடிவு?

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்: ஈபிஎஸ் வாக்குறுதி..!

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

அடுத்த கட்டுரையில்
Show comments